பள்ளியில் தமிழ், மாண்டரின் பாடங்கள்: கல்வி அமைச்சு ஆழ்ந்து சிந்திக்கிறது

 

Tamil&Mandarin in schoolsகாஜாங் இடைத் தேர்தல் பல அமைச்சர்களையும், குறிப்பாக அம்னோ அமைச்சர்களை, தீவிரமாக சிந்திக்க வைக்கிறது. தேர்தல் காலங்களில் இந்தியர்களையும் சீனர்களையும் ஏமாற்றி அவர்களுடைய வாக்குகளை பிடுங்குவதற்கு என்ன செய்யலாம் என்று அவர்கள் ஆழ்ந்து சிந்திப்பது வழக்கம். இதனை அவர்கள் 1955 ஆம் ஆண்டிலிருந்து வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர். சீனமொழிக் கல்வி பற்றி தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான், லிம் லியன் கியோக் மற்றும் டான் செங் லோக் ஆகியோருடன் ஆழ்ந்து சிந்தித்து அவர்களை ஏமாற்றினார்!

இப்போது இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ அதனைச் செய்ய களம் இறங்கியுள்ளார். தமிழ் மற்றும் மாண்டரின் மொழிகளை பள்ளிகளில் பாடங்களாக அறிமுகப்படுத்த அவரது அமைச்சு ஆழ்ந்து சிந்தித்து வருகிறது என்று இன்று கோலதிராங்கானுவில் கூறினார்.

“தற்போது ஆங்கிலம், உயர்வான சிந்தனைத் திறன் மற்றும் இதர பாடங்களை மட்டுமே நாம் வலியுறுத்துகிறோம்”, என்று கூறி அவர் தமது சிந்தனைத் திறனை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், இத்திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அது குறித்து பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்று மேலும் கூறி சமாளித்துக் கொண்டார்.

 

TAGS: