ஜின்னாவைதான் முதல் பிரதமராக்க ஆசைப்பட்டார் காந்தி?! சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் தலாய்லாமா!!

நேரு மற்றும் ஜின்னா பற்றிய சர்ச்சை கருத்திற்கு தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார்.

அண்மையில் கோவாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தலாய்லாமா கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றி பேசினார். அப்போது மாணவரின் ஒரு கேள்விக்கு பதிலளித்த தலாய்லாமா  சுதந்திரத்திற்கு பின் முகமது அலி ஜின்னாதான் இந்தியாவின் முதல் பிரதமராக வேண்டும் என காந்தி விரும்பினார் ஆனால் நேரு அதற்கு ஒத்துழைக்கவில்லை அதற்கு நேருவிடம் இருந்த சிறிய சுயநலமே காரணம் என்றும் கூறியிருந்தார்.

இந்த பதில் பலர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. தான் கூறியதில் தவறு இருக்குமானால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஜின்னா பிரதமர் ஆகியிருந்தால் இந்தியா பிரிக்கப்பட்டு இருக்காது தலாய்லாமா

புதுடெல்லி, கோவா மாநில மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திபெத்திய தலைவர் தலாய்லாமா மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். சரியான முடிகள் தொடர்பாக மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தலாய்லாமா, நிலப்பிரபுத்துவ முறையைவிட ஜனநாயக முறையே நல்லது, அதில் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரிடம் மட்டுமே உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்தியாவை பார்க்கையில், முகமது அலி ஜின்னாவிற்கு பிரதமர் பதவியை கொடுக்க மகாத்மா காந்தி விரும்பியதாக நான் நினைக்கிறேன். ஆனால் ஜவகர்லால் நேரு அதனை மறுத்துவிட்டார்.

பிரதமர் ஆக வேண்டும் என்று அவர் ஸ்திரமாக இருந்தார். மகாத்மா காந்தியின் திட்டமானது நிறைவேறியிருந்தால், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே இருக்கும். நேருவை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும், மிகவும் அனுபவம் வாய்ந்தவர், ஆனால் சில தவறுகளும் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

-nakkheeran.in

TAGS: