ரசாயனம் கலந்த 70 விநாயகர் சிலைகள் பறிமுதல்- போராட்டத்தில் இறங்கிய தொழிலாளர்கள்!!

திருவள்ளூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 70 விநாயகர் சிலைகள் ரசாயனம் கலவைக்கொண்டு தயாரிக்கப்பட்டவை என அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் வட்டாட்சியர் மேற்கொண்ட நடவடிக்கையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சிலைகளில் 70 சிலைகள் ரசாயனம் கலந்து செய்யப்பட்டவை என பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்கு வைக்கப்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் தங்கள் ஒரு நாள் பிழைப்பு பாதிக்கப்படும் என தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

-nakkheeran.in

TAGS: