அரசியல் கைதிகள் விவகாரம்: யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடை பயணத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று(15) யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வலியுறுத்தி அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறத்தி நடைபயணம் மேற்கொண்ட மாணவர்களால் மகஜர் ஒன்றுகையளிக்கப்பட்டது.

இதில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமீனன் உடன் நடைபயண போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெண் மாணவிகள் என அனைவரும் ஐ.நா யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மகஜரை கையளித்தனர்.

-www.tamilcnn.lk

TAGS: