இந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து எதுவும் இல்லை- வேதா

பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, எம்ஏசிசியிடம் அறிவிப்பதற்குச் சொத்து என்று எதுவும் தம்மிடம் இல்லை என்றார்.

ஹிண்ட்ராப் தலைவருமான வேதமூர்த்தி, தாம் சம்பாதித்த பணமெல்லாம் மலேசிய இந்திய சமூகத்துக்குப் போராடுவதிலேயே செலவாகிப் போனதாகக் கூறினார்.

“காலம் முழுவதும் போராளியாக இருந்துள்ளேன். என் வருமானம் மொத்தத்தையும் ஏழைகளாகவுள்ள இந்தியர்களுக்குப் போராடுவதிலேயே செலவு செய்து விட்டேன்.

“நான் ஒரு வழக்குரைஞரும் ஆவேன். என்னிடம் சொத்து எதுவும் இல்லை. சம்பாதித்தது எல்லாம் அப்படியே போய்விட்டது”, என்றவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

13 எம்பிகள் இன்னும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என எம்ஏசிசி அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் வேதமூர்த்