தமிழக மீனவர்கள் 20 பேர் கைது

எல்லைத் தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த தமிழக மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (12) இரவு முதல் இன்று (13) காலை வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் வைத்து குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, இவர்களை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் வகையில், மீனவர் பரிசோதனை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-tamilmirror.lk

TAGS: