வவுனியாவில் சிங்கள இனவாதிகளின் அட்டகாசத்தை பாருங்கள்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பகுதியையும் பௌத்தமயமாக்கி சப்புமல்கஸ்கந்த என பெயரை மாற்றி சிங்கள குடியேற்றத்தினை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அங்குள்ள கச்சல் சமனங்குளத்தில் அக்கிராமத்திலும் அதனை அண்டி வாழ்ந்த வெடிவைத்தகுளம் பிரதேச மக்களும் இணைந்து விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

எனினும் யுத்தம் காரணமாக வெடிவைத்தகுளம் மற்றும் கச்சல் சமனங்குளம் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் வெளியேறிய நிலையில் தற்போதும் அப்பகுதியில் மக்கள் குடியேறாத நிலையிலும் தமது வயல் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழலிலேயே கொக்கச்சான்குளம் என்ற தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமத்தினையும் அக்குளத்தினையும் ஆக்கிரமித்து கலாபோகஸ்வௌ என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு தற்போது அப்பிரதேசம் சிங்கள மக்களின் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

இந் நிலையில் கொக்கச்சான்குளம் என்ற கலாபோகஸ்வௌ கிராமத்தின் பின்புறமாக அதனை அண்டிய கச்சல் சமனங்களத்தினையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு சப்புமல்கஸ்கந்த என சிங்கள பௌரை சூட்டவுள்ளதாகவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கச்சல் சமனங்களத்தில் பௌத்த துறவியொருவர் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கும் அப்பிரதேசத்து மக்கள் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரதேசத்தனை காத்து தருமாறும் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.

-athirvu.in

TAGS: