அமெரிக்காவுடனான ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகல்!

1987 ஆமாண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஏவுகணை உடன்படிக்கையினை முறித்துக் கொண்டதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Cold War எனப்படும் ரஷ்ய அமெரிக்கா இடையேயான பனி யுத்தம் முடிவுற 4 வருடங்களுக்கு முன்பு1987 ஆமாண்டு இவ்விரு தேசங்களும் தாம் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் முகமாக இந்த உடன்படிக்கையை செய்து கொண்டன.

சமீப காலமாக இந்த ஒப்பந்தத்தை மதிக்காது ரஷ்யா செயற்பட்டு வருவதாக அதாவது ஏவுகணைகளைத் தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. இதனால் ஏற்கனவே தம்முடைய அத்துமீறலான ஏவுகணைகள் அனைத்தையும் அழிக்கா விட்டால் ரஷ்யாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் இருந்து விலகப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். இவ்வாறு செய்யத் தவறினால் இன்னும் 6 மாதங்களுக்குள் ரஷ்யாவுடனான உடன்படிக்கையில் இருந்து வெளியேறப் போவதாகவும் அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

ஆனால் அதற்குள் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்ய அதிபர் புதின் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com