நடிகைகளிடம் இதை பார்த்து தான் தேர்ந்தெடுக்கின்றனர்! சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்

ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரிக்கவும் செய்கிறார்.

சினிமாவை குறித்தும் அரசியலை குறித்தும் அவ்வப்போது பேசி வரும் பா.ரஞ்சித் நேற்று மகளிர் தினத்தை பற்றியும் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், தமிழ்சினிமாவில் கதாநாயகிகளை, போகப்பொருளாகவும் சந்தையாகவும்தான் பார்க்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று கூறினார்.

மேலும் ஒரு திரைப்படத்திற்கு நடிகைகளை தேர்வு செய்யும் போது, அவர் நல்ல நடிகையா, சிறப்பாக நடிப்பாரா என அவருடைய திறமையை பார்த்து தேர்வு செய்யாமல், உடல் அமைப்பு மற்றும் அழகு இருக்கிறதா? என பார்த்து தேர்வு செய்கின்றனர் எனவும் கூறினார். இவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-cineulagam.com