தேயிலை ஏற்றுமதியால் 160 கோடி ரூபா வருமானம்!

தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சபையின் தலைவர் எல்.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தேயிலை உற்பத்தித் துறையில் கூடுதலான வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: