நான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்’; அன்றே வெளிப்படையாக கூறிய சஹ்ரான்!

தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதை சஹ்ரான் ஹாசிம் பகிரங்கமாக அறிவித்தாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே சட்டத்தரணி அபுசாலி உவைஸ் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

2017ஆம் ஆண்டில் சஹ்ரானும் அவருடைய ஆதவாளர்களும் வாள்கள், மற்றும் கத்திகளுடனும் இருந்த நிலையில் எப்படி இந்தளவு பாரிய ஆயுதங்களைப் பெற்றார்கள்?

மிகவும் வறுமையில் இருந்த சஹ்ரானின் நிதி நிலைமை ஒன்றரை வருடங்களில் அவர் எப்படி இந்தளவு நிதியைப் பெற்று பலமானவரானார் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஜனநாயகம் இஸ்லாத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதது என நாட்டின் இறைமை தொடர்பில் சஹ்ரான் ஹாசிம் கேள்வியெழுப்பியதுடன், தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதை சஹ்ரான் ஹாசிம் பகிரங்கமாக அறிவித்தாகவும் குறிப்பிட்டார்.

-athirvu.in

TAGS: