இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் இரானுக்கு இடையேயான அணு ஒப்பந்தத்தை பாதுகாப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க பிரான்ஸ் மற்றும் இரான் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இதனை பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் அணு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனை கைவிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிபர் மக்ரோங், இரான் அதிபர் ஹசன் ருஹானியிடம் தொலைபேசியில் பேசும்போது கவலை தெரிவித்தார்.

இரான் அணு ஒப்பந்தம்

இரானின் அணு திட்டத்தை முடக்கும் வகையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் ருஹானி அழைப்பு விடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்து பல குழப்பங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தியை இரான் குறைத்துக்கொண்டால், இரான் மீதான தடைகளை நீக்க அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

-BBC_Tamil