ஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் – செல்வம் எம்.பி

அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.அவ்­வா­றில்­லா­விட்டால் மக்கள் ஒரு­போதும் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் என்­ப­துடன் மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார்.

காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சர்­வ­தே­சத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத நீதியை பிளவு பட்ட தமிழ் அர­சி­யல்­வா­தி­களால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யுமா? தமிழ்த் தலை­மைகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்தால் நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்தின் மீது ஒரு அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்க முடியும். அவர்­களின் ஒற்­று­மையும், பத­வியும் தான் அர­சுக்கு எதி­ரான ஆயுதம் என்­பதை உண­ர­வேண்டும் என்று காணா­மல்­போ­னோரின் உற­வுகள் அமையம் தெரி­வித்­தி­ருந்த கருத்து தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறி­ய­தா­வது:

நாட்டின் இரு­பெரும் முக்­கிய கட்­சிகள் சர்­வ­தே­சத்தின் ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைத்த போது, அந்த அர­சாங்­கத்­திற்கு தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்­றக்­கூ­டிய இய­லுமை காணப்­படும் என்ற எண்­ணத்­தி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ்­வ­ர­சாங்­கத்­திற்கு அனு­ச­ரணை வழங்­கி­யது. அதன்­படி படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட மக்­களின் காணிகள் சில மீள ஒப்­ப­டைக்­கப்­பட்­டமை, காணா­மல்­போனோர் அலு­வ­லகம் ஸ்தாபிக்­கப்­பட்­டமை உள்­ளிட்ட சில விட­யங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. எனினும் அவை முழு­மை­யாகப் பூர்த்தி செய்­யப்­ப­டாத நிலையே தொடர்­கின்­றது.

ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் இடையில் ஏற்­பட்ட முரண்­பாட்டில் எமது கோரிக்­கை­களைத் தட்­டிக்­க­ழிக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. உதா­ர­ண­மாக படை­யினர் வச­முள்ள பொது­மக்கள் காணி­களை விடு­விக்கும் விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்­தி­ன­ருக்குப் பொறுப்­பாக ஜனா­தி­ப­தியே இருக்­கின்றார். எனவே அவ­ருக்கு இது­கு­றித்து அழுத்­தத்தை வழங்­கி­னாலும் கூட, அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாத நிலை­யுள்­ளது. எம்மால் அவ­ருக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க  முடி­யுமே தவிர நிபந்­த­னை­களை விதிக்க முடி­யாது.

அதே­போன்று ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நி­திகள் அவ்­வப்­போது இலங்­கைக்கு வந்து போகி­றார்கள். அதன்­போது ஐ.நா.வின் தீர்­மா­னத்தை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும் என்ற அழுத்­தத்தைப் பிர­யோ­கித்­தாலும், அவ்­வி­ட­யத்தில் பொறுப்­புக்­கூறும் வகையில் அவர்­களும் செயற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இந்­நி­லையில் அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் எவை­யேனும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இல்­லா­விட்டால் மக்கள் ஒரு­போதும் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள். அதே­போன்று மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும். எனவே இந்த அர­சாங்கம் எஞ்­சி­யுள்ள தனது பத­விக்­கா­லத்தில் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வரும் பயன்­த­ராத யோச­னைகள் எவற்­றுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்கக் கூடாது என்­பதே எனது நிலைப்­பா­டாகும் என்றார்.

ஆனால் எதிர்­வரும் தேர்­தல்­களில் கூட்­ட­மைப்பு தனித்துப் போட்­டி­யிட்­டாலும், ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்கும் என்று நம்­பு­வ­தாக ஐ.தே.கவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கருத்து வெளியிட்டிருந்தாரே என்று வினவியபோது அதற்கு பதிலளித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது குறித்து நாங்கள் தான் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டும். அவ்வாறிருக்க நாங்கள் ஆதரவு வழங்குவோம் என்று அவர்களாக நம்புவது தவறாகும். எமது தீர்மானத்தை நாங்களே எடுப்போம் என்று தெரிவித்தார்.

-tamilcnn.lk

TAGS: