கஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் – பாக்யராஜ்!

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட இயக்குனர் கே.பாக்யராஜ், கஞ்சா அடிமையாக இருந்ததாகவும், போதை மரத்தில் தனக்கு ஞானம் கிடைத்ததாகவும் 42 வருடங்கள் கழித்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

மனைவி குண்டாக இருந்தால் கணவன் சின்னவீடு வைத்துக் கொள்ளலாம் என்றும், அதனால் என்ன மாதிரியான விபரீதங்கள் வரும் என்பதையும் தனது திரைக்கதை யுக்தியால் தமிழ் திரை ரசிகர்களின் மூளைக்குள் திணித்து வெற்றி கண்டவர் இயக்குனர் கே. பாக்யராஜ்.

பல வெற்றிப் படங்களை தமிழ் திரை உலகிற்கு தந்த இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், தான் ஒரு கஞ்சா அடிமையாக இருந்ததாக, திரை உலகிற்கு வந்து 42 ஆண்டுகள் கடந்து முதன்முதலாக பொது மேடையில் ஒப்புக் கொண்டுள்ளார். சென்னை வடபழனியில் நடந்த கோலா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அதே மேடையில் பேசிய ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம் , கஞ்சா விற்பவர்களின் தலையை அறுக்க வேண்டும் என்று பேசி எதிர்ப்புத் தெரிவித்தார்.

சமீபகாலமாக கஞ்சா போதையில் சிக்குண்ட நபர்கள் செய்யும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கஞ்சா பழக்கத்தில் இருந்து விடுபட்டால் தான் போதை இளைஞர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்பதற்கு கே.பாக்யராஜ் தான் வாழும் உதாரணம்..!

-athirvu.in