“கொடுங்கோல் ஆட்சிக்கு பலியானவன் நான்” என்கிறார் அஹ்மட் மஸ்லான்!

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (ஐஆர்பி) Inland Revenue Board (IRB) பெற்ற 2 மில்லியனை அறிவிக்கத் தவறியதாக போண்டியன் எம்.பி. அஹ்மட் மஸ்லான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எம்.ஏ.சி.சிக்கு தவறான அறிக்கை அளித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும், நீதிபதி அஸ்மான் அகமது முன் அவரது குற்றங்கள் வாசிக்கப்பட்ட பின்னர் இரு குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என்று ஒப்புக்கொள்ளவில்லை.

நீதி அறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு, அஹ்மட் மஸ்லான் நான்கு வரி பன்தூன் (கவிதை) ஒன்றைப் படித்தார். அதில் அவர் தன்னை நிரபராதி என்றும் கொடுங்கோன்மைக்கு பலியானவர் என்றும் அறிவித்தார்.