MCO குற்றவாளிகள்: சிறைத்தண்டனை பிரச்சினை விரைவில் விவாதிக்கப்படும் – இஸ்மாயில் சப்ரி

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது குறித்த விவகாரம், ஏ.ஜி. துறை, மலேசிய காவல்துறை (PDRM) மற்றும் சிறைச்சாலைத்துறை இடையே விரைவில் விவாதிக்கப்படும்.

மூத்த பாதுகாப்பு அமைச்சர் டத்தோ செரி இஸ்மாயில் சப்ரி யாகோப், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த சிறப்பு அமைச்சரவைக் குழுவின் போது இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று அவர் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் கூறினார்.