சரவாக் காவல்துறைத் தலைவர் நேர்மறை கோவிட்-19 பாதிப்பு

சரவாக் காவல்துறைத் தலைவர் அய்டி இஸ்மாயில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தொண்டை வலி காரணமாக நேற்று மதியம் சரவாக் பொது மருத்துவமனைக்கு சென்றதாக அய்டி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்க மருத்துவமனை நேற்று இரவு அவரை அழைத்தது.

“நான் நேற்று இரவு மருத்துவமனைக்குத் திரும்பினேன். அதன் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

அவரது மனைவி மற்றும் சரவாக் போலிஸ் படைத் தலைமையகத்தில் அவருடன் பணிபுரிந்த உறுப்பினர்கள், அவரது அலுவலகத்தில் உள்ளவர்கள் உட்பட, அனைவரும் கோவிட்-19 சோதனை முடிவுகள் வரும் வரை தங்களது சொந்த தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அய்டி கூறினார்.