நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தை தீர்மானிக்க பிரதமருக்கு உதவுகிறது சுகாதார அமைச்சு

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க, சுகாதார அமைச்சு பிரதமர் முகிதீன் யாசின் மற்றும் அவரது அமைச்சரவைக்கு பல பரிந்துரைகளை முன்வைக்கும்.

டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தினசரி பாதிப்புகளின் அதிகரிப்பு கட்டுப்பாட்டில் இருந்தாலும், கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.

“குறிப்பிடத்தக்க (அதிவேக) அதிகரிப்பு எதுவும் இல்லை”.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கேட்டபோது, டாக்டர் நூர் ஹிஷாம், “பல பரிந்துரைகள் முன்வைக்கப்படும்” என்றார்.

“முழுமையான தரவுகளை ஆராய எங்களுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படும்”.

“கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி, அமைச்சகம் சில பரிந்துரைகளை முன்வைப்போம். அதன் பின், முடிவு எடுப்பது குறித்து, அமைச்சரவை மற்றும் பிரதமரிடம் விட்டுவிடுவோம்” என்று அவர் கூறினார்.