இதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது

ஊடரங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49,000க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியிலிருந்து இதுவரை 12,800 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டினார்.

TamilMirror