குவான் எங் வழக்கில் மகாதீர் சம்பந்தப்பட்டாரா? – அசாலினா கேள்வி

1MDB நிதி தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து ரிசா அஜீஸுசை விடுவிக்க பிரதமர் முகிதீன் யாசின் ஒப்புதல் அளித்துள்ளாரா என்று நேற்று செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் கேள்வி எழுப்பினார். இது குறித்து முன்னாள் அமைச்சர் அசாலினா ஒத்மான் சைட் லியோங்கை சாடியுள்ளார்.

அத்தகைய கேள்வியை, முன்னாள் நிதியமைச்சர் லம் குவான் எங், அவருக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அவர்களுக்கும் அனுப்பலாம் என்று அசலினா கூறினார்.

செப்டம்பர் 2018 இல், பினாங்கு உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் லிம் குவான் எங்கை இரண்டு ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

“ஆகஸ்ட் 2, 2018 அன்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த முன்னாள் வழக்கறிஞரின் முடிவை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்த முடிவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? நிச்சயமாக இல்லை, தானே? அல்லது நான் தவறாக புரிந்துகொண்டேனா?” என்று அவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

“அரசியலமைப்பின்படி அதிகாரப் பிரிவினை கொள்கையைப் பற்றி நான் ஒய்.பி.க்கு நினைவூட்ட வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன், இல்லையா?” என்றார் அசாலினா.

ஃபோகஸ் மலேசியா வெளியிட்ட லியோங்கின் கட்டுரை குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் அசாலினா இதனைக் கூறினார். ரிசாவுடன் பேரம் பேசுவதற்கு முகிதீன் ஒப்புதல் அளித்தாரா என்று அந்த பி.கே.ஆர் உறுப்பினர் கேட்டிருந்தார்.

இருப்பினும் முன்னதாக, பிரதமர் அலுவலக அறிக்கையில், முகிதீன், நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் ஈடுபடவில்லை என்று கூறியிருந்தார்.

ஐந்து பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரிசாவுக்கும் அரசு தரப்புக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக மே 14 அன்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், 107.3 மில்லியன் அமெரிக்க டாலர் (RM465.3 மில்லியன்) மதிப்பிலான சொத்துக்களை வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பும் நிபந்தனையின் பேரில் ரிசா விடுவிக்கப்பட்டார். ஒப்பந்தத்திற்கு இணங்க ரிசா தவறினால், குற்றச்சாட்டை மீண்டும் நிலைநிறுத்தி நீதிமன்றத்திற்கு கொண்டு வர அரசு தரப்புக்கு உரிமை உண்டு.