கோவிட்-19: 48 புதிய பாதிப்புகள், 53 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் மேலும் 48 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,185 ஆக உள்ளது.

நண்பகல் நிலவரப்படி, 53 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,912 ஆக அல்லது மொத்த பாதிப்புகளில் 82.1 சதவீதமாக உள்ளது.

குணப்படுத்தப்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,158 ஆகும்.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில் 4 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 44 உள்ளூர் பாதிப்புகள் உள்ளன என்றார்.

44 உள்ளூர் தொற்றுநோய்களில், 25 பாதிப்புகள் வெளிநாட்டினருடன் தொடர்புடையவை என்றும், அவற்றில் 21 பாதிப்புகள் செமெனி குடிவரவு முகாமில் கண்டறியப்பட்டுள்ளன என்று நூர் ஹிஷாம் இன்று கூறினார்.

மொத்தம் ஒன்பது நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது.