கோவிட்-19: 4 புதிய பாதிப்புகள், 40 மீட்புகள்

நான்கு புதிய கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,600 ஆக கொண்டுவந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“நான்கு புதிய பாதிப்புகளில், மூன்று பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகளின் பாதிப்புகள் ஆகும்.”

மேலும் ஒரு பாதிப்பு, ஜோகூரில் உள்ள ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சோதனையில் கண்டறியப்பட்ட மலேசியர் சம்பந்தப்பட்டதாகும்.

“இன்று நாட்டில் மலேசிய குடிமக்கள் அல்லாதவர்களிடையே பதிவான பாதிப்புகள் ஏதும் இல்லை” என்று அவர் கூறினார்.

டாக்டர் நூர் ஹிஷாம், இன்று 40 பாதிப்புகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன என்றார்.

எனவே, நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 208 என்றும் அவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு, கோவிட்-19 இலிருந்து முழுமையாக மீட்கப்பட்டு வார்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,271 அல்லது மொத்த பாதிப்புகளில் 96.2 சதவீதம் ஆகும்.

மதியம் நிலவரப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இரண்டு நேர்மறையான பாதிப்புகள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.

“கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் அதிகரிப்பு இன்று அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“ஆக, மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 121 அல்லது மொத்த பாதிப்புகளில் 1.41 சதவீதமாக உள்ளது.