அசார் ஹாருன் சபாநாயகர், அசாலினா துணை சபாநாயகர் – ஙா கோர் மிங்

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அஜீசன் ஹாருனை புதிய சபாநாயகராக நியமிக்க பிரதமர் முகிதீன் யாசின் நோட்டீஸ் அனுப்பியதை சபையின் துணை சபாநாயகர் ஙா கோர் மிங் உறுதிப்படுத்தினார்.

பாரிசானின் உறுப்பினரும் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாலினா ஓத்மான் சைட் துணை சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் ஙா கூறினார்.

இன்று ஒரு சீன செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை வெளிப்படுத்தினார்.

இது ஜூலை 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் திட்டமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டால் அசார் மற்றும் அசாலினா ஆகியோர் தங்களின் நியமனத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று முகிதீன் கூறியுள்ளார்.

அசார் 2018 செப்டம்பர் முதல் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் அசாலினா, ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததோடு, பாரிசான் நிர்வாகத்தின் போது சட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இருப்பினும், பாக்காத்தான் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆரிஃப் மற்றும் ஙாவை தங்கள் பதவியில் நிலைத்திருக்க அழைப்பு விடுத்துள்ளன.

இப்போது தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் இருக்கும் மற்றொரு துணை சபாநாயகர் முகமட் ரஷீத் ஹஸ்னோன் இந்த மாற்றத்தில் அவர் பாதிக்கப்படவில்லை.