தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷியா மீது 3 நாடுகள் பரபரப்பு குற்றச்சாட்டு

தடுப்பூசி

தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷியா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளன. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன் : கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இறங்கி உள்ளன.

இந்த நிலையில், தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷியா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளன. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘கோசி பியர்’ என்று அழைக்கப்படக்கூடிய ‘ஏபிடி29’ ஹேக்கிங் குழு, ரஷிய உளவுத்துறையின் ஒரு அங்கமாக இருந்து கொண்டு, தடுப்பூசி உருவாக்கும் கல்வி மற்றும் மருந்து நிறுவனங்களில் தாக்குதல் நடத்துகிறது என அவை கூறுகின்றன.

தடுப்பூசி ஆராய்ச்சியை சீர்குலைப்பதை விட, அறிவுசார் சொத்துக்களை திருடுவதற்கான முயற்சி நடைபெறுவதை காண்பதாக இங்கிலாந்து தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூறுகிறது. இந்த அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து செயல்படுகிறது.

தடுப்பூசி பற்றிய தகவல்களை திருடும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டிருப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் கூட்டாக குற்றம் சுமத்தி இருப்பது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

malaimalar