மேலும் 15 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 15 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,121 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,782 ஆக காணப்படுகின்றது.

தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

TamilMirror