கோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

மொத்தம் 12 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு உள்ளூர் தொற்று பாதிப்புகள் மற்றும் ஐந்து இறக்குமதி பாதிப்புகள் ஆகும்.

“நாட்டில் ஏற்பட்ட ஏழு பாதிப்புகளில், ஐந்து பாதிப்புகள் மலேசியர்களிடையே மற்றும் இரண்டு பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்களிடையே ஆகும்” என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நாட்டில், மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 பரிமாற்ற பாதிப்புகள் பற்றிய விவரங்களையும் அவர் வழங்கினார்.

  • ஜோகூர்: சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனையில் கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு;
  • கெடா: PUI சிவகங்கா திரளைலிருந்து இரண்டு பாதிப்புகள்;
  • சிலாங்கூர்: ஒரு மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனையில் கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு;
  • நெகேரி செம்பிலன்: சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு;

நாட்டில், குடிமக்கள் அல்லாதவர்களிடையே 2 பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:

  • ஜொகூர்: அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனையில் கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு;
  • சபா: குயின் எலிசபெத் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு மரண வழக்கு கோவிட்-19க்கு சாதகமாக கண்டறியப்பட்டது.

மலேசியாவில் ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 8,976 ஆக உள்ளது என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். அதே நேரத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 207 ஆகும்.

மற்றொரு இறப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனால், மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 125 பேருக்கு கொண்டு வந்துள்ளது.

“125வது இறப்பு (நோயாளி 8974) 64 வயதுடைய மலேசிய அல்லாத (பிலிப்பைன்ஸ்) நபர். அவர் இதய நோய்களின் பின்னணியைக் கொண்டவர்.

“அவருக்கு ஜூலை 25, 2020 அன்று காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தும் சிகிச்சை பெறவில்லை.”

“ஜூலை 29 அன்று, அவர் மயக்கமடைந்து, பின்னர் சபாவின் குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்கிரீனிங் சோதனைகள் அவர் கோவிட்-19க்கு சாதகமானவர் என்பதைக் காட்டியது,” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து முழுமையாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 96.3 சதவீதம் அல்லது இன்று மீட்கப்பட்ட 27 பாதிப்புகள் உட்பட 8,644 பாதிப்புகள் ஆகும் என்று அவர் கூறினார்.

“இதுவரை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) கோவிட்-19 சிகிச்சை பெறும் மூன்று நேர்மறையான பாதிப்புகள் உள்ளன, அவற்றில் ஒரு பாதிப்புக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.