நடிகை ரியா சக்ரபோர்த்தி மும்பை பைகுல்லா சிறையில் அடைப்பு

சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் கைதான நடிகை ரியா மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பை, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நடிகை ரியாவிடம் 3 நாட்களாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே நடிகை ரியா, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்றும் நிருபர்களிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் மாலை 7.30 மணிக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ரியா சக்ரபோர்த்தி ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது நடிகை ரியா அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை 14 நாட்கள் (செப்டம்பர் 22 வரை) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து,  மும்பை பைகுல்லா சிறைச்சாலையில் நடிகை ரியா அடைக்கப்பட்டார்.இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று முறையிடுவார் எனத்தெரி

dailythanthi