நஜிப், அம்னோ நலன்களை பாதுகாக்க 1 எம்.டி.பி ஏற்படுத்தப்பட்டது – முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி

1 எம்.டி.பி வழக்கு | 1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1 எம்.டி.பி) என்பது நஜிப் ரசாக்கின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அம்னோ கட்சிக்கு நிதி திரட்டுவதற்குமான ஒரு நிறுவனம் என்று கோலாலம்பூரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் இன்று கூறப்பட்டது.

ஜோ லோ அந்நிறுவனத்தில் பணிபுரிந்தபோது இந்த விஷயம் குறித்து அவருக்குத் தெரிவித்ததாக 47 வயதான 1MDB இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஹஸீம் அப்துல் ரஹ்மான் கூறினார்.

எவ்வாறாயினும், ஜோ லோ மற்றும் நஜிப் எவ்வாறு அந்த நிதிகளைப் பெற்றார்கள் என்பதை ஒருபோதும் விளக்கவில்லை என்று 10வது அரசு தரப்பு சாட்சியான அவர் கூறினார்.

வெளிநாடுகளில் நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது அல்லது செலவிடப்படும் என்பது பற்றியும் தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் முகமட் ஹஸீம் கூறினார்.

67 வயதான நஜிப், 1MDB நிதியில் இருந்து RM2.3 பில்லியன் லஞ்சம் பெற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளையும், அதே அளவு சம்பந்தப்பட்ட 21 பண மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேரா முன் விசாரணை நாளை தொடர்கிறது.