கோவிட் 19 : 835 புதியத் தொற்றுகள், 2 மரணங்கள் பதிவு

இன்று 835 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது அன்றாட நேரலைச் சந்திப்பில் தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 89 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையே, இன்று 674 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

இன்று 2 மரணங்கள் சபா மாநிலத்தில் பதிவாகியுள்ளன. ஆக, இதுவரை நாட்டில் 238 மரணங்கள் இத்தொற்று நோயினால் சம்பவித்துள்ளன.

மேலும் இன்று, சபாவில் லிந்தாஸ் திரளை மற்றும் லாபுவானில் லிம்புங்கான் திரளை என இரண்டு புதியத் திரளைகள்  கண்டறியப்பட்டுள்ளன.

மாநிலம் வாரியாக, புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சபாவில் 410, நெகிரி செம்பிலானில் 155, சிலாங்கூரில் 125, லாபுவானில் 74, சரவாக்கில் 16, பினாங்கில் 13, பேராக்கில் 11, கோலாலம்பூரில் 9, ஜொகூரில் 8, கெடா, திரெங்கானுவில் 4 மற்றும் புத்ராஜெயாவில் 1.