முஹைதீன் : இந்த அவசரநிலை, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல

மாட்சிமை தங்கியப் பேரரசரின் ஒப்புதலுடன் நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவிப்பது இராணுவ சதி அல்ல என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார்.

பொது மக்களுக்கான அரசு தொடர்ந்து செயல்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பிரதமரின் கூற்றுப்படி, கோவிட் -19 பரவுவதைத் தடுக்க, அரசாங்கம் இந்த அவசரகாலத்தை அறிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு செயலூக்க நடவடிக்கையாக, அவசரகாலப் பிரகடனத்தைச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஒப்புக்கொண்டார்.

“ஆகஸ்ட் 1, 2021 அல்லது அதற்கு முன்னதாக, தினசரி கோவிட் -19 நேர்மறை வழக்கு புள்ளிவிவரங்களைக் கட்டுப்படுத்தவும் திறம்படக் குறைக்கவும் முடிந்தால், அவசரகால அமலாக்கத்தை நிறைவுக்குக் கொண்டுவர மன்னர் ஒப்புக்கொண்டுள்ளார்,” என்று இஸ்தானா நெகாரா கூறியுள்ளது.