நஸ்ரி அஜிஸுக்கு நேர்மறை கோவிட் -19

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கோவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்புகொண்ட பின்னர், திரையிடல் செய்ததாக நஸ்ரி கூறினார்.

ஜஹரின் (மொஹமட் யாசின்), தனது வலைப்பதிவில், அவர் கோவிட் -19 தொற்றுக்கு நேர்மறையானவர் என்று கூறியதால், நானும் சோதனை செய்தேன். எனது திரையிடல் முடிவு நேற்று நேர்மறை என வந்துள்ளது,” என்று மலேசியாகினி இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

ஜனவரி 12-ம் தேதி, கோலாலம்பூரில் உள்ள அம்னோ தலைமையகத்தில் நஸ்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார், இதில் பல நிருபர்களும் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினருமான தாஜுதீன் அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் பண்டார் துன் ரசாக் அம்னோ செயலாளரான ஜஹரின், தனக்கு கோவிட் -19 நோய் கண்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், கிளந்தான், கோத்தபாருவில் உள்ள இராஜா பெரெம்புவான் ஜைனாப் மருத்துவமனையில் தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பதாக நஸ்ரி கூறினார்.