இன்று 2,936 புதிய நோய்த்தொற்றுகள், ஜொகூரில் பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்தது

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,936 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

ஜொகூர் 730 புதிய நோய்த்தொற்றுகளுடன் கடுமையான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

978 நேர்வுகளுடன் சிலாங்கூர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையில், இறப்புகள் இன்று 13-ஆக பதிவாகியுள்ளன. கோலாலம்பூரில் அறுவர், சிலாங்கூரில் மூவர், சரவாக்கில் இருவர், மலாக்கா மற்றும் ஜொகூரில் தலா ஒருவர். ஆக மொத்தம், இதுவரையில் 1,005 நோயாளிகள் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள்.

இன்று 4,889 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 104 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (978), ஜொகூர் (730), கோலாலம்பூர் (227), சரவாக் (199), நெகிரி செம்பிலான் (191), பினாங்கு (188), பேராக் (155), சபா (101), கிளாந்தான் (38), திரெங்கானு (37), கெடா (36), பஹாங் (26), மலாக்கா (26), புத்ராஜெயா (3), லாபுவான் (1).

இன்று 13 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.