இன்று 2,468 புதிய நோய்த்தொற்றுகள், 14 இறப்புகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,468 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்தது.

சிறைகள் மற்றும் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 175 (7.1 விழுக்காடு) ஆகும். குறிப்பாக, பேராக், பத்து காஜாவில் உள்ள சிறை சம்பந்தப்பட்ட தெம்போக் பெண்டேரா திரளையில் 107 நேர்வுகள் பதிவாகிவுள்ளன.

இதற்கிடையில், சுகாதார அமைச்சு இன்று 14 கோவிட் -19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

இறப்புகளில் பத்து சிலாங்கூரில் நிகழ்ந்துள்ளன, மீதமுள்ளவை சரவாக் (2), ஜொகூர் (1) மற்றும் சபா (1) எனப் பதிவாகியுள்ளன. ஆக, இதுவரையில் இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 1076 ஆக

இன்று 4,055 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 92 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (932), ஜொகூர் (428), பேராக் (308), கோலாலம்பூர் (155), பினாங்கு (155), சரவாக் (133), நெகிரி செம்பிலான் (100), கிளாந்தான் (96), சபா (94), மலாக்கா (22), கெடா (15), பஹாங் (11), திரெங்கானு (9), லாபுவான் (6).