இன்று 2,253 புதிய நோய்த்தொற்றுகள், பேராக்கில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,253 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பாதிப்புகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் (755 நேர்வுகள்; 33.5 விழுக்காடு) பதிவாகியுள்ளன. அதேவேளையில், பேராக்கிலும் பாதிப்புகளின் எண்ணிக்கையில் (545 நேர்வுகள்; 24.2 விழுக்காடு) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், 11 புதிய இறப்புகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்களில் 5 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது இறந்து இருந்தனர். இது தேசிய இறப்பு எண்ணிக்கையை 1,111-ஆக கொண்டுவருகிறது.

இன்றைய இறப்புகள், சிலாங்கூர் (4), கோலாலம்பூர் (3), சரவாக் (2), சபா (1), ஜொகூர் (1) என பதிவாகியுள்ளன. இறந்தவர்களில் மூன்று பேர் மலேசியர்  அல்லாதவர்கள்.

இன்று 3,085 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 201 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 93 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

புத்ராஜெயா மற்றும் லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (633), பேராக் (545), ஜொகூர் (276), சரவாக் (250), சபா (129), கோலாலம்பூர் (122), பினாங்கு (93), கிளாந்தான் (73), நெகிரி செம்பிலான் (68), கெடா (25), பஹாங் (21), மலாக்கா (13), பெர்லிஸ் (4), திரெங்கானு (1).

இன்று 10 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 8 பணியிடம் சார்ந்தவை.