இன்று 2,364 புதிய நோய்த்தொற்றுகள், 10 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,364 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகளும் 10 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய இறப்புகளில் ஆறு கோலாலம்பூரிலும், 2 சிலாங்கூரிலும், ஜொகூர் மற்றும் சரவாக்கில் தலா ஓர் இறப்பும் பதிவாகியுள்ளது.

இன்று 3,320 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 99 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவான் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (862), ஜொகூர் (314), பேராக் (305), சரவாக் (255), சபா (157), பினாங்கு (155), கோலாலம்பூர் (117), நெகிரி செம்பிலான் (74), கிளாந்தான் (68), கெடா (17), மலாக்கா (17), திரெங்கானு (11), பஹாங் (8), புத்ராஜெயா (4).

இன்று 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 7 பணியிடம் சார்ந்தவை.