பி.கே.ஆர். எம்.பி. : டிசம்பரில் இருந்து கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் நியூசிலாந்தில் உள்ளாரா?

பி.கே.ஆர். எம்.பி.யும், கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சருமான எட்மண்ட் சந்தாரா குமார், 2020 டிசம்பரிலிருந்து தனது குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து தொடர்ந்து, பி.கே.ஆர். எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

`சரவாக் ரிப்போர்ட்` வலைத்தளத்தின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், சந்தாரா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் கூறினார்.

குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதோடு, பெறப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருப்பித் தர வேண்டுமென்று, சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தாராவைப் பிரபாகரன் வலியுறுத்தினார்.

“தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு (பிஎன்) மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை? இன்று சந்தாரா எங்கே? பிஎன் அரசியல் கொந்தளிப்பைத் தாங்க முடியாததால் அவர் தனது அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்திக்க விரும்பும் சிகாமாட் வாக்காளரா? அல்லது கூட்டரசி பிரதேசத் துணையமைச்சரைச் சந்திக்க விரும்பும் அரசு ஊழியரா?

“2020 கிறிஸ்மஸ் முதல், யாராவது சந்தாராவைச் சந்தித்திருக்கிறீர்களா? `சரவாக் ரிப்போர்ட்` அவர் இப்போது நியூசிலாந்தில் இருப்பதாக கூறுகிறது, இது உண்மையா?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

பதிவுக்காக, சந்தாரா பி.கே.ஆரை விட்டு பெர்சத்துவில் தன்னை இணைத்துகொண்டார்.

கடந்த மாதம் அங்கு வெள்ளம் ஏற்பட்டபோது, சந்தாரா சிகாமாட்டில் இல்லை என்றும் பிரபாகரன் குற்றஞ்சாட்டினார்.

அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசிப்பதாகவும், அவரது குழந்தைகள் அங்கு படிப்பதாகவும் சரவாக் ரிப்போர்ட் கூறுகிறது.

தொகுதி மக்கள் சிக்கலில் இருக்கும்போது, நாடாளுமன்றத் தொகுதியை விட்டு வெளியேறும் எம்.பி.க்கள் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றார் பிரபாகரன்.

சந்தாரா மற்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா ஆகியோரின் கருத்தறிய, மலேசியாகினி அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறது.

இருப்பினும், குடும்ப விஷயங்கள் காரணமாக சந்தாரா நியூசிலாந்து சென்றார் எனத் தெரிகிறது.

பிப்ரவரி 1-ம் தேதி, கூட்டரசுப் பிரதேசத் தினத்தை முன்னிட்டு அவர் மலேசியா திரும்பியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதன் பின்னர் மீண்டும் அவர் அங்கு சென்றுள்ளார்.

மார்ச் 2020 முதல, கடுமையான பயண வழிகாட்டுதல்களை வகுக்கும் நாடுகளில் நியூசிலாந்தும் உள்ளது.

கோவிட் -19 பரவலை அந்நாடு வெற்றிகரமாகத் தடுத்துள்ளது, இதுவரை மொத்தம் 2,372 பாதிப்புகளும் 26 இறப்புகளும் மட்டுமே அங்குப் பதிவாகியுள்ளன.

நேற்று, அந்நாடு ஒரு புதிய நேர்வைப் பதிவு செய்தது.