கோவிட் -19 நேரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளின் அச்சுறுத்தல் குறைந்துள்ளது – புக்கிட் அமான்

கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில், நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளின் அச்சுறுத்தல் மறைமுகமாகக் குறைந்துள்ளது என்று புக்கிட் அமான், பயங்கரவாத தடுப்பு பிரிவின் (E8) சிறப்புப் பிரிவு தலைமை உதவி இயக்குநர் டி.சி.பி. நோர்மா இஷாக் தெரிவித்தார்.

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரச மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்.) தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளின் எண்ணிக்கை 2020- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறைந்து காணப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

“கோவிட் -19 தொற்றைத் தொடர்ந்து, பி.டி.ஆர்.எம். நிலையான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் இருக்கும் செயல்பாடுகளைப் பார்க்கிறது.

“நாட்டைத் தாக்கும் தொற்றுநோய் நிலைமை, நாட்டில் எழக்கூடிய வன்முறையின் எந்தவொரு கூறுகளையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளைத் தொடர பி.டி.ஆர்.எம்-க்கு ‘மாறுவேடத்தில் ஆசீர்வாதம்’ என்ற நன்மையை அளிக்கிறது,” என்று நேற்று பெர்னாமா டிவியின் ‘ருவாங் பிச்சாரா’ நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட அவர் கூறினார்.

உலகளாவிய தொற்றுநோய் நிலைமை மலேசியர்களின் நிலைமையை ஒரு வசதியான பயன்முறையில் இருந்து உயிர்வாழும் பயன்முறைக்கு மறைமுகமாக மாற்றியுள்ளது என்றார்.

“ஒவ்வொருவருக்கும் சுயப் பிரச்சினைகள், சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர், சிலர் வீடு, வாகனக் கடன் நிலுவையில் இருந்தனர், சிலர் வாடகை செலுத்த முடியவில்லை, சிலருக்கு உணவு வாங்க முடியவில்லை மற்றும் பலவிதமான துயரங்கள்.

“இதுபோன்ற விஷயங்கள் மறைமுகமாக வாழ்க்கையைச் சீர்குலைத்து, தடுமாறச் செய்துள்ளன, மேலும் மலேசியர்களிடையே பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களின் மனநிலையையும் இத்தொற்று பலவீனப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் நாட்டின் நிச்சயமற்ற நிலைமை மற்றும் எதிர்கால வடிவம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நோர்மா கூறினார்.

எவ்வாறாயினும், சூழ்நிலைகள் மற்றும் சூழலுக்கு ஏற்ப பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், நிலைமையை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

பயங்கரவாதக் குழுவில் சேர அவர்களை யார் வழிநடத்துவது என்பது குறித்து கூறுகையில், அது அவர்களே… தீவிரவாதக் குழுக்களே என்று நோர்மா கூறினார்.

“தீவிரவாதிகளைத் தவிர வேறு யார்? பயங்கரவாதத்தின் சூழலில், அது திட்டமிட்டு, கட்டமைக்கப்பட்ட முறையில் நடக்கிறது. வழக்கமாக, ஆட்சேர்ப்பவர்களால் குறிவைக்கப்படுபவர்கள் இளையர்கள், இளைஞர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூக உறுப்பினர்கள் போன்ற சுரண்டலுக்கு ஆளாகக்கூடியவர்கள்,” என்று அவர் கூறினார்.

தீவிரவாத இயக்கத்தில், தொழில் வல்லுனர்களும் ஈடுபட்டுள்ளதாக நோர்மா கூறினார், அவர்கள் ஒரு மாறுபட்ட நம்பிக்கை அல்லது ஒரு பயனற்ற போராட்டத்தில் மிகவும் ஆர்வமாக இருப்பதே காரணம்.

-பெர்னாமா