இன்று 2,148 புதிய நேர்வுகள், 15 புதியத் திரளைகள், 10 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,148 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மார்ச் 5 முதல் (2,145 நேர்வுகள்), கடந்த 41 நாட்களில் மிக உயர்ந்ததாகும்.

தற்போது 17,575 கோவிட் -19 நேர்வுகள் செயலில் உள்ளன, இது ஏப்ரல் 6-ஆம் தேதி 14,161 ஆக இருந்தது.

இதற்கிடையில், இன்று 10 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. மரணமடைந்தவர்களில் ஒருவர் வெளிநாட்டுக்காரர்.  இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,363 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 1,259 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 212 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 82 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (512), சிலாங்கூர் (459), கிளந்தான் (221), சபா (202), ஜொகூர் (182), கோலாலம்பூர் (171), பினாங்கு (134), திரெங்கானு (57), மலாக்கா (53), பேராக் (51), நெகிரி செம்பிலான் (34), பஹாங் (34), கெடா (26), புத்ராஜெயா (8), லாபுவான் (3), பெர்லிஸ் (1).

இன்று 9 பணியிடத் திரளைகள், 6 சமூகத் திரளைகள் என 15 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.