இன்று 2,195 புதிய நேர்வுகள், 8 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,195 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக நான்காவது நாளாக புதிய வழக்குகளின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது.

சரவாக் 508 நேர்வுகளுடன், அதிக புதிய தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மிக அதிகமான புதிய நேர்வுகள் உள்ள மாநிலமாக சரவாக் திகழ்கிறது.

332 புதிய நேர்வுகளுடன் கிளந்தானின் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதுவரையில், அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகள் அங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜொகூர் மாநிலமும் 387 புதிய நேர்வுகளுடன் அதிகரிப்பு காட்டியுள்ளது.

இதற்கிடையில், இன்று 8 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,378 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 1427 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 90 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (508), சிலாங்கூர் (431), ஜொகூர் (387), கிளந்தான் (332), கோலாலம்பூர் (176), சபா (112), பினாங்கு (84), நெகிரி செம்பிலான் (42), பேராக் (35), கெடா (30), திரெங்கானு (16), பஹாங் (15), மலாக்கா (15), லாபுவான் (6), புத்ராஜெயா (3), பெர்லிஸ் (3).

இன்று 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.