இன்று 2,875 புதிய நேர்வுகள், 7 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,875 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளந்தான் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அதனை அடுத்து சிலாங்கூரும் சரவாக்கும் உள்ளன.

இன்று 7 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,407 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 2,542 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 115 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

கிளந்தான் 662, சிலாங்கூர் 633, சரவாக் 474, கோலாலம்பூர் 332, ஜொகூர் 169, சபா 160, பினாங்கு 144, கெடா 91, நெகிரி செம்பிலான் 55, பேராக் 49, மலாக்கா 42, பஹாங் 29, திரெங்கானு 22, புத்ராஜெயா 10, லாபுவான் 3.

ஐந்து பணியிடத் திரளைகள், நான்கு சமூகத் திரளைகள், பள்ளி / கல்வி நிறுவனங்கள் சார்ந்த மூன்று திரளைகள் மற்றும் ஒரு மதத் தளம் சார்ந்த திரளை ஆகியவற்றை உள்ளடக்கிய 13 புதியத் திரளைகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.