தமிழகத்தில் மேலும் 21,228பேருக்கு கொரோனா: 144பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 21,228பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 144பேர் உயிரிழந்து உள்ளனர். 19,112பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,40,512 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 21,228பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,34பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், 21,194பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,49,292ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,32,38,475மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 12,450பேர் ஆண்கள், 8,778பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,53,945ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,95,309 ஆகவும் அதிகரித்து உள்ளது.

19,112பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,09,450 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் 144பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில்,58பேர் தனியார் மருத்துவமனையிலும், 86பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,612 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக விபரம்

dinamalar