இன்று 3,744 புதிய நேர்வுகள், 17 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,744 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.

மேலும், இன்று 17 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,591 பேர் பலியாகியுள்ளனர்.

சிலாங்கூர் (9), சரவாக் (2), பேராக் (2), நெகிரி செம்பிலான் (1), கிளந்தான் (1) மற்றும் ஜொகூர் (2) ஆகிய மாநிலங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

இன்று 2,304 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 185 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 1,548 (137,709), கிளந்தான் – 480 (15,851), சரவாக் – 419 (33,086), கோலாலம்பூர் – 313 (45,090), ஜொகூர் – 292 (46,733), பினாங்கு – 195 (20,640), கெடா – 124 (10,518), நெகிரி செம்பிலான் – 76 (19,180), திரெங்கானு – 73 (4,583), பேராக் – 65 (15,131), சபா – 50 (58,511), மலாக்கா – 43 (7,679), பஹாங் – 49 (5,415), லாபுவான் – 5 (2,473),  புத்ராஜெயா – 11 (1,408), பெர்லிஸ் – 1 (369).

இன்று 20 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.