இன்று 4,765 புதிய நேர்வுகள், 39 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,765 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளது, இது மூன்று மாதங்களுக்குள் பதிவான அதிக எண்ணிக்கை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முகநூல் பதிவு ஒன்றில், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

“பண்டிகை கால மாதத்தின் நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை 5,000-ஐ தாண்டக்கூடும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இன்று 39 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,761 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய மரண எண்ணிக்கையின் பதிவு பின்வருமாறு :- ஜொகூர் (10), கோலாலம்பூர் (8), சிலாங்கூர் (5), சபா (3), பஹாங் (2), சரவாக் (2), கெடா (2), கிளந்தான் (2), நெகிரி செம்பிலான் ( 1), திரெங்கானு (1), புத்ராஜெயா (1), பேராக் (1), மலாக்கா (1).

இன்று 3,124 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 469 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 244 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,082), கோலாலம்பூர் (540), சரவாக் (405), ஜொகூர் (348), கிளந்தான் (297), பினாங்கு (259), கெடா (226), பேராக் (172), நெகிரி செம்பிலான் (122), மலாக்கா (110), சபா (70), பஹாங் (63), திரெங்கானு (60), லாபுவான் (6), புத்ராஜெயா (4), பெர்லிஸ் (1).

இன்று 20 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.