இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,441 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளநேற்று (30) இதுவரையில் 2,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 182,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 149,825 ஆக அதிகரித்துள்ளது.