புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 5,304 ஆக குறைந்தது

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,304 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும், 64 மரணங்கள் இன்று புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,908 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 8,163 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 452 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

அனைத்து மாநிலங்களிலும் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,973), சரவாக் (544), கோலாலம்பூர் (462), ஜொகூர் (363), சபா (335), நெகிரி செம்பிலான் (331), கெடா (301), பினாங்கு (256), கிளந்தான் (179), லாபுவான் (158), மலாக்கா (145), பேராக் (121), பஹாங் (78), திரெங்கானு (46), புத்ராஜெயா (7), பெர்லிஸ் (5).

மேலும், 15 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.