இன்று 4,949 புதிய நேர்வுகள், 60 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 4,949 புதிய கோவிட் -19 நேர்வுகள் மற்றும் 60 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

நாட்டில் இன்று பரவியப் புதிய நோய்த்தொற்றுகள் 81.31 விழுக்காடு  மலேசியர்களும், 18.69 விழுக்காடு குடிமக்கள் அல்லாதவர்களும் அடங்கியுள்ளன.

இன்று புகாரளிக்கப்பட்ட 60 மரணங்களுடன், இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,968 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 6,588 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 459 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,523), சரவாக் (744), கோலாலம்பூர் (503), ஜொகூர் (430), நெகிரி செம்பிலான் (323), சபா (273), பினாங்கு (214), கிளந்தான் (214), கெடா (199), பேராக் (136), மலாக்கா (119), லாபுவான் (113), திரெங்கானு (86), பஹாங் (61), புத்ராஜெயா (10), பெர்லிஸ் (1).

மேலும் இன்று, 17 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுல் 12 பணியிடத் திரளைகள் ஆகும்.