‘நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம், கோவிட் -19 தொற்றுக்கு எதிராக அல்ல’ – டாக்டர் நூர் ஹிஷாம்

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மலேசியர்களிடையே ஒற்றுமையின் உணர்வு இன்னும் குறைவாக உள்ளது, இது நேர்மறையான நிகழ்வுகளின் அதிகரிப்புக்குப் பங்களித்திருக்கிறது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக தொற்றுநோய் நாட்டைத் தாக்கியிருந்தாலும், அனைத்து தரப்பினரும் செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்குவது இன்றும் ஒரு பிரச்சினையாக உள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

“ஒற்றுமை அடிப்படையில் கருத்து வேறுபாடு இருப்பதால், எஸ்.ஓ.பி.க்களுக்கு இணங்குவது இன்னும் குறைவாக உள்ளது என்று நான் நினைக்கிறேன், நாம் கருத்துகள், அணுகுமுறைகள் மற்றும் பலவற்றில், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம், நாம் கிருமிக்கு எதிராகப் போராடவில்லை,” என்று அவர் கூறினார்.

இன்று, சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (யுபிஎஸ்ஐ) ஏற்பாட்டிலான, ஆரம்பகட்ட உளவியல் உதவி குறித்த முதல் மலேசிய சர்வதேச இணையவலை நிகழ்ச்சியின் போது, தனது உரையில் அவர் இதைத் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியின் போது, ​​ஒவ்வொரு முடிவும் ஆழ்ந்த கவனத்துடன் எடுக்கப்படுகிறது என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் உறுதியளித்தார்.

“வாழ்க்கை, வாழ்வாதாரத் தேடல், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் இடையிலான சமநிலை, சரியான சமநிலையை எவ்வாறு உருவாக்குகிறீர்கள், இது மிகவும் கடினமானது … சவாலானது … பொருளாதாரத்தில் குறைந்தபட்ச தாக்கத்தையும் ஆரோக்கியத்தில் அதிகபட்ச முடிவுகளையும் பெற, சில நேரங்களில் இது எளிதானது அல்ல, ஏனென்றால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் நிறைய விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“இதனால்தான் சில நேரங்களில் இது எளிதானது அல்ல, ஏனென்றால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் நிறைய விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா