5,911 புதிய நேர்வுகள், ஜூன் மாத இறப்பு எண்ணிக்கை 1,500-ஐ கடந்தது

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,911 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 72 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,348 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 6,918 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 441 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 2,111 (226,455), கோலாலம்பூர் – 483 (70,789), சபா – 201 (67,378), ஜொகூர் – 498 (67,366), சரவாக் – 569 (59,139), நெகிரி செம்பிலான் – 770 (37,834), கிளந்தான் – 223 (33,319), பினாங்கு – 167 (32,933), பேராக் – 245 (24,548), கெடா – 204 (23,110), மலாக்கா – 134 (15,817), பஹாங் – 56 (11,953), திரெங்கானு – 62 (10,923), லாபுவான் – 185 (6,828), புத்ராஜெயா – 3 (2,153), பெர்லிஸ் – 0 (570).

மேலும், நாட்டில் பதிவான 2,604 திரளைகளில், 824 இன்னும் செயலில் உள்ளன. இன்று 24 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.