4,743 புதிய நேர்வுகள், முதலிடத்தில் சிலாங்கூர்

கோவிட் 19 | இன்று நாட்டில், 4,743 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 77 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,554 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 5,557 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 445 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 1,566 (231,047), கோலாலம்பூர் – 635 (72,113), நெகிரி செம்பிலான் – 585 (39,549), சரவாக் – 507 (60,989), ஜொகூர் – 239 (68,546), சபா – 193 (67,900), கிளந்தான் – 165 (33,870), பினாங்கு – 195 (33,326), மலாக்கா – 167 (16,372), கெடா – 142 (23,604), பஹாங் – 131 (12,211), லாபுவான் – 104 (7,218), பேராக் – 68 (25,274), திரெங்கானு – 37 (10,990), புத்ராஜெயா – 7 (2,179), பெர்லிஸ் – 2 (574).