10,972 புதிய நேர்வுகள், கெடாவில் நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவிட் 19 | இன்று நாட்டில், 10,972 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கெடாவில் புதிய நேர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், ஜொகூர் தொடர்ந்து இரண்டாவது நாளாக 800-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.

மேலும், இன்று 129 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 7,148 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 6,439 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 435 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (4404), நெகிரி செம்பிலான் (1340), ஜொகூர் (876), கெடா (705), சபா (651), கோலாலம்பூர் (609), பஹாங் (475), மலாக்கா (474), பினாங்கு (426), பேராக் (324), சரவாக் (301), கிளந்தான் (170) , திரெங்கானு (144), புத்ராஜெயா (48), லாபுவான் (24), பெர்லிஸ் (1).

மேலும் இன்று, 31 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 18 பணியிடத் திரளைகள் ஆகும்.